Tuesday, November 15, 2011
Wednesday, November 2, 2011
விமர்சனம்
7ஆம் அறிவு
போதி தர்மன் என்னும் பல்லவ இளவரசன், புத்த மதத் தொண்டாற்ற சீனா செல்கிறார். அங்கு, மக்களுக்கு ஏற்படும் கொடிய நோயை குணப்படுத்துகிறார். தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்து, மக்களை பாதுகாக்கிறார். அங்குள்ள மக்களால் புத்தருக்கு இணையாகப் போற்றப்படுகிறார். வரலாற்றின் பக்கங்களில் காணப்படாத இந்த நிகழ்வுடன், இன்றைய தலைமுறையினரின் ஆராய்ச்சி, தியாகம் மற்றும் வருங்கால விஞ்ஞான வளர்ச்சியையும் சொல்கிறது படம்.
சயின்டிஸ்ட் மாணவியான ஸ்ருதி, போதி தர்மன் மரபணு பற்றி ஆராய்கிறார். சர்க்கஸ் கலைஞன் அரவிந்திடம் (சூர்யா) போதி தர்மன் மரபணு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவருக்குத் தெரியாமலேயே அதை ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில், இந்தியா மீது சீனா, பயோவார் தொடுக்கிறது. கொடிய நோய்க்கிருமியைப் பரப்ப, வில்லன் ஜானியை இந்தியாவுக்கு அனுப்புகிறது. அவன் இங்கு நோயைப் பரப்ப, அது வேகமாகப் பரவுகிறது. நோயை குணப்படுத்தும் மருந்து என்ன என்பது, போதி தர்மன் சீனாவுக்கு கற்றுக்கொடுத்தது. போதி தர்மன் குறித்த மரபணு சோதனை நடத்தும் ஸ்ருதி அதில் வென்றால் மீண்டும் போதி தர்மன் குணங்கள் அரவிந்துக்கு வந்து விடும். அப்படி வந்தால், நோய்க்கான மருத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஜானியின் இன்னொரு அசைன்மென்ட், ஸ்ருதியை போட்டுத்தள்ளுவது. ஜானி திட்டம் நிறைவேறியதா? ஸ்ருதி ஆராய்ச்சி வென்றதா? சூர்யா, போதி தர்மனாக மாறினாரா என்பது கதை.
முதல் 20 நிமிடப் படம், ஹாலிவுட் பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு. பனி படர்ந்த மலைகள், நிறம், உயரம் அனைத்திலும் மாறுபட்ட மக்கள், இவற்றுக்கு நடுவில் தமிழன் ஒருவன், 1600 வருடங்களுக்கு முன் கால்பதித்ததை காட்சியாகப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. காந்த விழிகள், கருணைப் பார்வை, நொடியில் எதையும் செய்து முடிக்கும் வேகம் என, சூர்யாவின் ஒவ்வொரு அசைவும் ஆச்சரியம். கதை இந்த நூற்றாண்டுக்குள் வரும்போது, அச்சு அசலான முருகதாஸ் படமாகிறது. சர்க்கஸ் கலைஞனான அரவிந்த், சர்க்கஸை பிரபலப்படுத்த ஆட்டம் போடுவதில் இருந்து, ஸ்ருதியின் ஆராய்ச்சிக்கான நட்பை காதலாக எடுத்துக்கொண்டு தவிப்பது வரை அருமை. சிக்ஸ்பேக் உடம்பு, நரம்பு முறுக்கேறும் சண்டை, சர்க்கஸ் சாகசம் என சூர்யாவின் உழைப்பு அளவிட முடியாத உயரத்தில் நிற்கிறது.
ஸ்ருதி, கடமையும், காதலும் மிக்க ஆராய்ச்சியாளராக வருகிறார். ஆராய்ச்சிக்காக, சூர்யாவிடம் விருப்பம் இல்லாமல் பழகுவதும், அவர் தன் காதலைச் சொல்லும்போது, ‘உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு பொண்ணு கையை தொட்டாலே காதல் வந்துருது’ என்று சூர்யா மீது எரிந்து விழுவதும், சூர்யாவை போதி தர்மனாக்கி நாட்டைக் காப்பாற்ற துடிப்பதுமாக, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஹாலிவுட் வில்லன் ஜானி ட்ரை நுயென், ஆக்ஷனில் பின்னி எடுப்பார் என்றால், நோக்கு வர்மத்தால் மற்றவர்களை மயக்கி, அவர்களை வைத்தே சண்டை போட்டு விட்டு, இவர் தலையை மட்டும் திருப்பித் திருப்பி பார்ப்பது ஏமாற்றம். எல்லாவற்றுக்கும் சேர்த்து கிளைமாக்சில் சூர்யாவோடு மோதி, சண்டை தாகத்தை தீர்த்து வைக்கிறார்.
ஹாரிஸின் இசையில், பாடல்கள் வெரைட்டி. சீனாவில் நடக்கும் காட்சிகளில், அந்நாட்டின் இசைப் பின்னணி கதைக்கும், காட்சிக்கும் வலு சேர்க்கிறது. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவை ஹாலிவுட் தரம் என்று சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டிய உழைப்பை அளித்துள்ளார். பீட்டர் ஹெய்னின் ஆக்ஷனும், ராஜீவனின் அரங்கங்களும் கதையுடன் நம்மை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. படத்தில் குறைகள் இருந்தாலும், ஒரு பெரும் தமிழ் வரலாற்றை சிறு எபிசோடுக்குள், பிரமாண்டமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே பாராட்டலாம் இயக்குனரை. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸுக்கு பாராட்டுகள்!
போதி தர்மன் என்னும் பல்லவ இளவரசன், புத்த மதத் தொண்டாற்ற சீனா செல்கிறார். அங்கு, மக்களுக்கு ஏற்படும் கொடிய நோயை குணப்படுத்துகிறார். தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்து, மக்களை பாதுகாக்கிறார். அங்குள்ள மக்களால் புத்தருக்கு இணையாகப் போற்றப்படுகிறார். வரலாற்றின் பக்கங்களில் காணப்படாத இந்த நிகழ்வுடன், இன்றைய தலைமுறையினரின் ஆராய்ச்சி, தியாகம் மற்றும் வருங்கால விஞ்ஞான வளர்ச்சியையும் சொல்கிறது படம்.
சயின்டிஸ்ட் மாணவியான ஸ்ருதி, போதி தர்மன் மரபணு பற்றி ஆராய்கிறார். சர்க்கஸ் கலைஞன் அரவிந்திடம் (சூர்யா) போதி தர்மன் மரபணு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவருக்குத் தெரியாமலேயே அதை ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில், இந்தியா மீது சீனா, பயோவார் தொடுக்கிறது. கொடிய நோய்க்கிருமியைப் பரப்ப, வில்லன் ஜானியை இந்தியாவுக்கு அனுப்புகிறது. அவன் இங்கு நோயைப் பரப்ப, அது வேகமாகப் பரவுகிறது. நோயை குணப்படுத்தும் மருந்து என்ன என்பது, போதி தர்மன் சீனாவுக்கு கற்றுக்கொடுத்தது. போதி தர்மன் குறித்த மரபணு சோதனை நடத்தும் ஸ்ருதி அதில் வென்றால் மீண்டும் போதி தர்மன் குணங்கள் அரவிந்துக்கு வந்து விடும். அப்படி வந்தால், நோய்க்கான மருத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஜானியின் இன்னொரு அசைன்மென்ட், ஸ்ருதியை போட்டுத்தள்ளுவது. ஜானி திட்டம் நிறைவேறியதா? ஸ்ருதி ஆராய்ச்சி வென்றதா? சூர்யா, போதி தர்மனாக மாறினாரா என்பது கதை.
முதல் 20 நிமிடப் படம், ஹாலிவுட் பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு. பனி படர்ந்த மலைகள், நிறம், உயரம் அனைத்திலும் மாறுபட்ட மக்கள், இவற்றுக்கு நடுவில் தமிழன் ஒருவன், 1600 வருடங்களுக்கு முன் கால்பதித்ததை காட்சியாகப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. காந்த விழிகள், கருணைப் பார்வை, நொடியில் எதையும் செய்து முடிக்கும் வேகம் என, சூர்யாவின் ஒவ்வொரு அசைவும் ஆச்சரியம். கதை இந்த நூற்றாண்டுக்குள் வரும்போது, அச்சு அசலான முருகதாஸ் படமாகிறது. சர்க்கஸ் கலைஞனான அரவிந்த், சர்க்கஸை பிரபலப்படுத்த ஆட்டம் போடுவதில் இருந்து, ஸ்ருதியின் ஆராய்ச்சிக்கான நட்பை காதலாக எடுத்துக்கொண்டு தவிப்பது வரை அருமை. சிக்ஸ்பேக் உடம்பு, நரம்பு முறுக்கேறும் சண்டை, சர்க்கஸ் சாகசம் என சூர்யாவின் உழைப்பு அளவிட முடியாத உயரத்தில் நிற்கிறது.
ஸ்ருதி, கடமையும், காதலும் மிக்க ஆராய்ச்சியாளராக வருகிறார். ஆராய்ச்சிக்காக, சூர்யாவிடம் விருப்பம் இல்லாமல் பழகுவதும், அவர் தன் காதலைச் சொல்லும்போது, ‘உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு பொண்ணு கையை தொட்டாலே காதல் வந்துருது’ என்று சூர்யா மீது எரிந்து விழுவதும், சூர்யாவை போதி தர்மனாக்கி நாட்டைக் காப்பாற்ற துடிப்பதுமாக, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஹாலிவுட் வில்லன் ஜானி ட்ரை நுயென், ஆக்ஷனில் பின்னி எடுப்பார் என்றால், நோக்கு வர்மத்தால் மற்றவர்களை மயக்கி, அவர்களை வைத்தே சண்டை போட்டு விட்டு, இவர் தலையை மட்டும் திருப்பித் திருப்பி பார்ப்பது ஏமாற்றம். எல்லாவற்றுக்கும் சேர்த்து கிளைமாக்சில் சூர்யாவோடு மோதி, சண்டை தாகத்தை தீர்த்து வைக்கிறார்.
ஹாரிஸின் இசையில், பாடல்கள் வெரைட்டி. சீனாவில் நடக்கும் காட்சிகளில், அந்நாட்டின் இசைப் பின்னணி கதைக்கும், காட்சிக்கும் வலு சேர்க்கிறது. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவை ஹாலிவுட் தரம் என்று சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டிய உழைப்பை அளித்துள்ளார். பீட்டர் ஹெய்னின் ஆக்ஷனும், ராஜீவனின் அரங்கங்களும் கதையுடன் நம்மை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. படத்தில் குறைகள் இருந்தாலும், ஒரு பெரும் தமிழ் வரலாற்றை சிறு எபிசோடுக்குள், பிரமாண்டமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே பாராட்டலாம் இயக்குனரை. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸுக்கு பாராட்டுகள்!
விமர்சனம்
வேலாயுதம்
கிராமத்தில் குறும்புக்கார பால்காரன் விஜய். தங்கை சரண்யா மோகனுக்காக ஊரையே அதகளம் பண்ணுபவர். தங்கை திருமணத்துக்கு சென்னை பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு வைத்திருக்கிறார். அதை எடுத்து, திருமணப் பொருட்கள் வாங்க பரிவாரங்களுடன் சென்னை வருகிறார். வந்த இடத்தில் வேலாயுதம் என்ற ஹீரோவை ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அமைதியை குலைக்க, சர்வதேச பயங்கரவாத கும்பல் திட்டமிடுகிறது. அதற்கு தமிழக அமைச்சரையே பயன்படுத்துகிறது. அவர், சென்னையில் பல இடங்களில் குண்டு வைக்கிறார். இவரது திட்டத்தை முறியடிக்க வேலாயுதம் என்ற ஹீரோ வருகிறார். யார் இந்த வேலாயுதம் என்று வில்லன் கோஷ்டி திணறுகிறது. மக்கள் ‘வேலாயுதமே துணை’ என்று தங்கள் ஹீரோவை கொண்டாடுகிறார்கள். பால்காரன் வேலாயுதத்துக்கும் காட்பாதர் வேலாயுதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆக்ஷன் திரைக்கதை.
தங்கை, மோதிரம் விழுந்துவிட்டது என்பதற்காக, கிணற்றில் தங்கம் இருப்பதாகச் சொல்லி ஊரையே தண்ணீர் இறைக்க வைப்பது, தங்கை வளர்க்கும் கோழியை பிடிக்க, ஊரையே புரட்டிப்போடுவது, தியேட்டரில் தங்கைக்கு பிடித்த ‘பாசமலர்’ பட காட்சியை திரும்ப திரும்ப போடச்சொல்லி வெறுப்பேற்றுவது என்று விஜய் அடிக்கும் கூத்துகள் வில்லேஜ் காமெடி. சென்னை வந்த பிறகு ஆக்ஷன் அதிரடி. தங்கையின் முருக்குப் பையை சந்தானம் திருடிவிட்டு ஓட, அவரைப் பிடிக்க விஜய் பைக்கை எடுத்துக் கொண்டு துரத்த, அதில் வெடிகுண்டு இருந்து வெடிப்பதும், ஜவுளிக் கடையில் வில்லன் கோஷ்டி சூட்கேசில் வெடிகுண்டு வைக்க, அதை எடுத்து வில்லன் இருக்கும் இடத்திலேயே விஜய் கொண்டு கொடுத்துவிட்டு வருவதுமாக, வில்லேஜ் வேலாயுதம் காட்பாதராக மாற்றப்படும் திரைக்கதை சுவாரஸ்யம். திருடனாக அறிமுகமாகி விஜயிடம் இருக்கும் பைனான்ஸ் பணத்தை திருட, அவருக்கு நண்பனாகும் சந்தானத்தின் லொள்ளுகள் படத்தின் கலகல ஏரியாவை திருடிக் கொள்கிறது.
ஜெனிலியா மரணத்தின் தருவாயிலும் தன் சமூக கடமையைச் செய்யும் பொறுப்புள்ள மீடியாகாரர். தான் உருவாக்கிய வேலாயுதம், விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு ஆச்சர்யப்படுவது, மக்களை காப்பாற்றும் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை மறந்து விஜய் மீது காதல் கொள்வது, அவர் தன் மாமன் மகள் ஹன்சிகாவை விரும்புவதை அறிந்து சின்ன ஏமாற்றமாக கலங்குவது என பக்குவமாக நடித்திருக்கிறார். இவருக்கு நேர் எதிர் ஹன்சிகா. மாமா மாமா என்று விஜய்யை சுற்றி சுற்றி வருவதிலும், ஜெனிலியாவைக் கண்டு பொறுமுவதிலும் கொஞ்சமாக நடிக்கிறார். அவ்வப்போது முந்தானையை விலகவிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கவும் செய்கிறார். கொலைவெறியோடு வரும் அபிமன்யூ சிங் ஹீரோ கையில் அடிபட்டு சாகிறார். சரண்யா மோகன் வழக்கமான தங்கை என்றாலும் அழகில் ஜொலிக்கிறார். பாம் வெடித்து உயிர்விடும் காட்சியில் நம்மையும் கலங்க வைக்கிறார்.
சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் பிரமாண்டம். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை வேலாயுதத்தை முறுக்கேற்றுகிறது. ப்ரியனின் கேமரா கிராமத்தில் அழகாகவும், நகரத்தில் ஆக்ரோஷமாகவும் பணியாற்றி இருக்கிறது. அமைச்சராக வரும் வினித் குமாரின் தோற்றத்திலும், மேனரிசத்திலும் தெலுங்கு வாடை. எல்லையில் இருக்கும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாட்டின் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. அண்ணன்-தங்கை சென்டிமென்ட் திருப்பாச்சியையும், ஸ்டேடியத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் அந்நியனையும் நினைவுபடுத்துகிறது. ‘தீமையை அழிக்க ஹீரோ வருவான்னு எதிர்பார்க்காம மக்கள் தங்கள் பிரச்னையை தாங்களே தீர்த்துக் கொள்ள வழி காணணும்’ என்கிற மெசேஜ் இயக்குனர் டச். லாஜிக் எங்கே இருக்கிறது?, இது எப்படி சாத்தியம்? இப்படியெல்லாம் நடக்குமா? என்கிற கேள்விகளை மறந்து விட்டு பார்த்தால், ‘வேலாயுதம்’ பின்னுகிறார்.
கிராமத்தில் குறும்புக்கார பால்காரன் விஜய். தங்கை சரண்யா மோகனுக்காக ஊரையே அதகளம் பண்ணுபவர். தங்கை திருமணத்துக்கு சென்னை பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு வைத்திருக்கிறார். அதை எடுத்து, திருமணப் பொருட்கள் வாங்க பரிவாரங்களுடன் சென்னை வருகிறார். வந்த இடத்தில் வேலாயுதம் என்ற ஹீரோவை ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அமைதியை குலைக்க, சர்வதேச பயங்கரவாத கும்பல் திட்டமிடுகிறது. அதற்கு தமிழக அமைச்சரையே பயன்படுத்துகிறது. அவர், சென்னையில் பல இடங்களில் குண்டு வைக்கிறார். இவரது திட்டத்தை முறியடிக்க வேலாயுதம் என்ற ஹீரோ வருகிறார். யார் இந்த வேலாயுதம் என்று வில்லன் கோஷ்டி திணறுகிறது. மக்கள் ‘வேலாயுதமே துணை’ என்று தங்கள் ஹீரோவை கொண்டாடுகிறார்கள். பால்காரன் வேலாயுதத்துக்கும் காட்பாதர் வேலாயுதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆக்ஷன் திரைக்கதை.
தங்கை, மோதிரம் விழுந்துவிட்டது என்பதற்காக, கிணற்றில் தங்கம் இருப்பதாகச் சொல்லி ஊரையே தண்ணீர் இறைக்க வைப்பது, தங்கை வளர்க்கும் கோழியை பிடிக்க, ஊரையே புரட்டிப்போடுவது, தியேட்டரில் தங்கைக்கு பிடித்த ‘பாசமலர்’ பட காட்சியை திரும்ப திரும்ப போடச்சொல்லி வெறுப்பேற்றுவது என்று விஜய் அடிக்கும் கூத்துகள் வில்லேஜ் காமெடி. சென்னை வந்த பிறகு ஆக்ஷன் அதிரடி. தங்கையின் முருக்குப் பையை சந்தானம் திருடிவிட்டு ஓட, அவரைப் பிடிக்க விஜய் பைக்கை எடுத்துக் கொண்டு துரத்த, அதில் வெடிகுண்டு இருந்து வெடிப்பதும், ஜவுளிக் கடையில் வில்லன் கோஷ்டி சூட்கேசில் வெடிகுண்டு வைக்க, அதை எடுத்து வில்லன் இருக்கும் இடத்திலேயே விஜய் கொண்டு கொடுத்துவிட்டு வருவதுமாக, வில்லேஜ் வேலாயுதம் காட்பாதராக மாற்றப்படும் திரைக்கதை சுவாரஸ்யம். திருடனாக அறிமுகமாகி விஜயிடம் இருக்கும் பைனான்ஸ் பணத்தை திருட, அவருக்கு நண்பனாகும் சந்தானத்தின் லொள்ளுகள் படத்தின் கலகல ஏரியாவை திருடிக் கொள்கிறது.
ஜெனிலியா மரணத்தின் தருவாயிலும் தன் சமூக கடமையைச் செய்யும் பொறுப்புள்ள மீடியாகாரர். தான் உருவாக்கிய வேலாயுதம், விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு ஆச்சர்யப்படுவது, மக்களை காப்பாற்றும் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை மறந்து விஜய் மீது காதல் கொள்வது, அவர் தன் மாமன் மகள் ஹன்சிகாவை விரும்புவதை அறிந்து சின்ன ஏமாற்றமாக கலங்குவது என பக்குவமாக நடித்திருக்கிறார். இவருக்கு நேர் எதிர் ஹன்சிகா. மாமா மாமா என்று விஜய்யை சுற்றி சுற்றி வருவதிலும், ஜெனிலியாவைக் கண்டு பொறுமுவதிலும் கொஞ்சமாக நடிக்கிறார். அவ்வப்போது முந்தானையை விலகவிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கவும் செய்கிறார். கொலைவெறியோடு வரும் அபிமன்யூ சிங் ஹீரோ கையில் அடிபட்டு சாகிறார். சரண்யா மோகன் வழக்கமான தங்கை என்றாலும் அழகில் ஜொலிக்கிறார். பாம் வெடித்து உயிர்விடும் காட்சியில் நம்மையும் கலங்க வைக்கிறார்.
சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் பிரமாண்டம். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை வேலாயுதத்தை முறுக்கேற்றுகிறது. ப்ரியனின் கேமரா கிராமத்தில் அழகாகவும், நகரத்தில் ஆக்ரோஷமாகவும் பணியாற்றி இருக்கிறது. அமைச்சராக வரும் வினித் குமாரின் தோற்றத்திலும், மேனரிசத்திலும் தெலுங்கு வாடை. எல்லையில் இருக்கும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாட்டின் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. அண்ணன்-தங்கை சென்டிமென்ட் திருப்பாச்சியையும், ஸ்டேடியத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் அந்நியனையும் நினைவுபடுத்துகிறது. ‘தீமையை அழிக்க ஹீரோ வருவான்னு எதிர்பார்க்காம மக்கள் தங்கள் பிரச்னையை தாங்களே தீர்த்துக் கொள்ள வழி காணணும்’ என்கிற மெசேஜ் இயக்குனர் டச். லாஜிக் எங்கே இருக்கிறது?, இது எப்படி சாத்தியம்? இப்படியெல்லாம் நடக்குமா? என்கிற கேள்விகளை மறந்து விட்டு பார்த்தால், ‘வேலாயுதம்’ பின்னுகிறார்.
Subscribe to:
Posts (Atom)

























