Thursday, January 30, 2014

டைரக்ஷனுக்கு சந்தோஷ் சிவன் முழுக்கு சந்தோஷ் சிவன் படம் இயக்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கடந்த 20 வருடமாக பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு துப்பாக்கி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தற்போது சூர்யா படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியதுடன் அதற்காக தேசிய விருது வென்றிருக்கிறார். டெரரிஸ்ட், மல்லி, அசோகா உள்ளிட்ட பல படங்களும் இயக்கி உள்ளார். தற்போது தமிழ், ஆங்கிலத்தில் சிலோன் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. சந்தோஷ் சிவன் கூறும்போது,பத்மஸ்ரீ விருது பெற்றது மகிழ்ச்சி, அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் படங்களில் பணியாற்றும்போது அவர்கள் காட்டும் அன்பு என்னை கவர்ந்தது. அடுத்து புதிய படம் இயக்க உள்ளேன். அதற்கான நட்சத்திர தேர்வு இன்னும் செய்யப்படவில்லை. பெரிய நிறுவனங்களிலிருந்து படம் இயக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் அடுத்து இயக்கும் படத்தை முடித்தவுடன் டைரக்ஷன் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளேன் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12365&id1=3#sthash.XyD19XRL.dpuf